மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத முதியவர் சாவு
04-Oct-2025
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைக் மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத முதியவர் இறந்தார். விழுப்புரம் அருகே வளவனுார் பகுதி மெயின் ரோடில், கடந்த 19ம் தேதி காலை, அடையாளம் தெரியாத, 58; வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், வளவனுார் நோக்கி நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக வேகமாக பைக் முதியவர் மீது மோதியது. இதில், கீழே விழுந்து பலத்த காயமடைந்த அவரை மீட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் நேற்று மாலை இறந்தார். புகாரின் பேரில் வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
04-Oct-2025