வேலை வாய்ப்பு முகாம் 18 பேருக்கு பணி நியமனம்
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில், 18 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில், 23 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்தனர். முகாமில் பங்கேற்ற 188 பேரில், 18 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் வேல்முருகன், பணி நியமன ஆணை வழங்கினார்.