உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக்கில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி

பைக்கில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி

அவலுார்பேட்டை: வளத்தி அருகே சைக்கிளில் மோதி பைக்கில் சென்றவர் பரிதாபமாக இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்த காமராஜ்,40. இவர் 7 ம்தேதி, இரவு 7 மணிக்கு பைக்கில் (டிவிஎஸ் எக்ஸ் எல், டிஎன் 25 ஏஇஸட் 2242 ) வளத்தி-செஞ்சி ரோடில் சென்று கொண்டிருந்தார்.கன்னலம் கிராமத்தை சேர்ந்த பெருமாள், 60 என்பவர் ஓட்டி வந்த சைக்கிள் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கிலிருந்து விழுந்த காமராஜ், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். வளத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி