31ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் வரும் 31ம் தேதி விவசாயிகள் குறை கேட்பு நடக்கிறது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 31ம் தேதி காலை 11:00 மணிக்கு, விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் எனது தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்க பிரதி நிதிகள் பங்கேற்று விவசாயம் தொடர்பாக கோரிக்கைகள் மட்டும் மனுவாக வழங்கலாம்.