உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / துணை முதல் வருக்கு தங்க சங்கிலி எல்லாம் அமைச்சர் பதவிக்கு தான் அசத்திய மாஜி அமைச்சர்

துணை முதல் வருக்கு தங்க சங்கிலி எல்லாம் அமைச்சர் பதவிக்கு தான் அசத்திய மாஜி அமைச்சர்

வி ழுப்புரம் மாவட்ட தி.மு.க.,வில், பொன்முடி, மஸ்தான் என 2 அமைச்சர்கள் இருந்தனர். தற்போது 2 பேரும் அமைச்சர் பதவியில் இல்லாத நிலை உள்ளது. இருவரும் மீண்டும் அமைச்சர் பதவியை பிடிப்பதற்கு கட்சி தலைமையிடம் முட்டி மோதி வருகின்றனர். ஆனால் இதுவரை கட்சி தலைமை கண்டுகொள்ளவில்லை. இதில் அமைச்சர் பதவி, மாவட்ட செயலாளர் பதவியை அடுத்தடுத்து பறி கொடுத்தவர் மஸ்தான். கடைசியில் ஒரு வழியாக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவியை மீண்டும் பிடித்து விட்டார். ஆனால் அமைச்சர் பதவி மட்டும் இன்னும் எட்டாக்கனியாக உள்ளது. இந்நிலையில் செஞ்சி தொகுதியைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் இல்ல திருமண விழா கடந்த 28ம் தேதி, சென்னையில் துணை முதல்வர் உதயநிதி வசிக்கும் குறிஞ்சி இல்லத்தில் நடந்தது. இந்த திருமணத்திற்கு மஸ்தான் முன்னின்று ஏற்பாடுகளை செய்திருந்தார். திருமணத்திற்கு தலைமை தாங்கி நடத்தி வைத்த, உதயநிதிக்கு, மஸ்தான், சர்ப்பரைஸ் பரிசாக தங்கச் சங்கிலியை அணிவித்தார். பரிசின் வெயிட்டை பார்த்து உதயநிதியே அதிர்ச்சியாகி விட்டாராம். இந்த தங்கச் சங்கிலி அணிவித்த விவகாரம் குறித்து சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதுபற்றி கட்சியினர் மத்தியில் பல்வேறு கமென்ட்டுகள் வெளியாகி வருகிறது. அதில் உதயநிதிக்கு அணிவிக்கப்பட்ட 50 சவரன் எனவும் இல்லை 25 சவரன்தான் எனவும் ஆளாளுக்கு ஒரு தகவலை 'வாட்ஸ் ஆப்பில்' பரப்பி வைரலாக்கி வருகின்றனர். எத்தனை சவரன் என்றாலும் துணை முதல்வருக்கு தங்கச் சங்கிலி அணிவித்து, மீண்டும் அமைச்சர் பதவியை பிடிப்பதற்கு காய் நகர்த்துகிறார் என உடன் பிறப்புகள் மத்தியில் தகவலை கசிய விடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை