உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  இலவச சைக்கிள் வழங்கும் விழா

 இலவச சைக்கிள் வழங்கும் விழா

விக்கிரவாண்டி: தென்பேர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு, தலைமையாசிரியை ராதா தலைமை தாங்கினார். ஆத்மா குழு தலைவர் வேம்பி ரவி முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை சகிதா வரவேற்றார். ஒன்றிய துணை சேர்மன் ஜீவிதாரவி, 27 மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினார். திட்ட குழு தலைவர் சண்முகம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வேலவன், ஆசிரியர்கள் விஸ்வநாதன், பாபு, பழனிவேல், லதா, சங்கரி, கவுசல்யாதேவி, மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி