ரெட்டணை கிரீன் பாரடைஸ் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை
திண்டிவனம்: ரெட்டணை கிரீன் பாரடைஸ் மேல்நிலைப்பள்ளி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சி.பி.எஸ்.இ., தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. மயிலம் அடுத்த ரெட்டணையில் உள்ள கிரீன் பாரடைஸ் மேல்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சி.பி.எஸ்.இ., தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பத்தாம் வகுப்பில் மாணவி யோகேஷ் ப்ரித்வி 459 மதிப்பெண்களும், மாணவி அனன்யா, 437 மதிப்பெண்களும், மாணவர் சபரீஷ் 416 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 400க்கு மேல் 5 மாணவர்களும், 350 மதிப்பெண்களுக்கு மேல் 15 மாணவர்கள் பெற்றுள்ளனர். தமிழில் இரண்டு மாணவர்கள் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுத்து சிறப்பிடம் பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் மாணவர் லோகேஷ், 389 மதிப்பெண்களும், மாணவர் தினேஷ், 377 மதிப்பெண்களும், மாணவி ராகவி, 376 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனர். சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை, பள்ளி தாளாளர் சண்முகம், முதன்மை இயக்குனர் வனஜா சண்முகம், செயலாளர் சந்தோஷ், நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் சண்முகம், முதல்வர் லட்சுமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.