உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குறைகேட்புக் கூட்டம்

குறைகேட்புக் கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உட்பட பல்வேறு துறைசார்ந்த 476 மனுக்களை கலெக்டர் பெற்றார்.மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு தீர்வு காண அலுவலர்களுக்கு, அறிவுறுத்தினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., அரிதாஸ், சப் கலெக்டர் முகுந்தன், பிற்பட்டோர் நல அலுவலர் தமிழரசன், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், சமூக நல அலுவலர் ராஜம்மாள், தாட்கோ மேலாளர் ரமேஷ்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !