நெடுஞ்சாலைத் துறை பணிகள் : கலெக்டர் அறிவுறுத்தல்
விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், நெடுஞ்சாலைத் துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். இதில், மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலமாக சாலை மேம்படுத்தும் பணிகள், புதியதாக கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள், ஏற்கனவே நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் பணிகளின் விவரங்கள், அதன் தரம் மற்றும் சாலை விரிவாக்கம், நபார்டு சாலை பணிகள், முதல்வரின் சாலை விரிவாக்க பணிகள் உள்ளிட்ட விவரங்கள் கேட்டறியப்பட்டது. அனைத்து பணிகளையும் தரமான முறையில், குறித்த காலத்திற்குள் முடித்திட கலெக்டர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் தனி டி.ஆர்., ராஜகுமார், விழுப்புரம் நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் உத்தண்டி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.