பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் இன்றும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில், தொடர் மழை காரணமாக, பல பள்ளி, கல்லுாரிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால், இன்று 4ம் தேதி புதன்கிழமை, விழுப்புரம் மாவட்டத்தில், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளித்து, கலெக்டர் பழனி நேற்று உத்தரவிட்டார். இதனால், மாவட்டத்தில் தொடர்ந்து, 5வது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.