அரசு கல்லுாரியில் காமராஜர் பிறந்த நாள்
விழுப்புரம்; விழுப்புரம் அடுத்த அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் காமராஜர் பிறந்த விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் தலைமை தாங்கினார். பேராசியர் சுவாமிநாதன் வரவேற்றார். பேராசிரியர் பாபு நோக்கவுரையாற்றினார். அரியபுத்திரன் முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் மணவாளன், சுமதி, சின்னதுரை, நல்லாசிரியர் கோவிந்தராஜன், ஜானகிராமன், சண்முகம் வாழ்த்தி பேசினர். இதில், காமராஜர் உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். பேராசிரியர்கள் தர்மலிங்கம், ரம்யா, நித்தியானந்தன், கிருஷ்வர், நித்யா, விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேராசிரியர் ரங்கநாதன் நன்றி கூறினார்.