உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயிலம் கோவிலில் கிருத்திகை விழா

மயிலம் கோவிலில் கிருத்திகை விழா

மயிலம் : மயிலம் முருகன் கோவிலில் கார்த்திகை மாத கிருத்திகை விழா நடந்தது.அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு பாலசித்தர், விநாயகர் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.தொடர்ந்து மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு பால் சந்தனம் பன்னீர் தேன் இளநீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் அபிஷேகமும், மகா தீபாரதனையும் நடந்தது. இரவு 8:00 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது.விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை