தொழிலாளியை தாக்கியவர் கைது
விழுப்புரம்: காணை அருகே தொழிலாளியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். காணை அடுத்த கோனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 52; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள மெடிக்கலில் மாத்திரை வாங்குவதற்காக தனது மொபட்டை நிறுத்தியுள்ளார். அப்போது, அங்கு போதையில் இருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த ஓம்முருகன் மகன் தாமோதரன், 30; ஏன் இங்கு வாகனத்தை நிறுத்தினாய் என கேட்டு தகராறு செய்து முருகனை தாக்கினார். புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து, தாமோதரனை கைது செய் தனர்.