சமரச தீர்வு திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழுப்புரம்: விழுப்புரம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், சமரச தீர்வு திட்டம் குறித்து வழக்காடிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் மாவட்ட சமரச மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட நீதிபதி மணிமொழி தலைமை தாங்கினார். இதில், செப்., வரை நடக்கும் சமரச தீர்வு திட்ட வாய்ப்பை பயன்படுத்தி வழக்குகளை விரைந்து முடித்துக்கொள்ள வழக்காடிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.அப்போது, அனைத்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள், சமரசர்கள், வழக்கறிஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.