மேலும் செய்திகள்
பவ்டா கல்லுாரியில் முப்பெரும் விழா
22-Mar-2025
மயிலம்; கீழ்சித்தாமூரில், கொல்லியங்குணம் பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா நடந்தது.கல்லுாரி செயலாளர் பிரபலா ஜெ ரோஸ் தலைமை தாங்கினார். நிறுவனர் ஜாஸ்லின் தம்பி பேசினார். முதல்வர் சுதா கிறிஸ்டி ஜாய் வரவேற்றார்.பவ்டா துணை இயக்குநர் அல்பினா ஜோஸ், கல்வி ஒருங்கிணைப்பாளர் டேவிட் ஆனந்த், ஊராட்சி தலைவர் அய்யம்மாள் வாழ்த்தி பேசினர்.நிகழ்ச்சியை திட்ட அலுவலர் சேகர் தொகுத்து வழங்கினார். மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
22-Mar-2025