வடகிழக்கு பருவமழை குறித்து அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்
திண்டிவனம் : திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, பேரிடர் மேலாண்மை மண்டல அலுவலர் கலால் உதவி ஆணையர் முருகேசன் தலைமை தாங்கினார். தாசில்தார் சிவா முன்னிலை வகித்தார்.நகராட்சி கமிஷனர் குமரன் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.