காணும் பொங்கலையொட்டி ஆற்று பகுதியில் திரண்ட மக்கள்
விழுப்புரம்: காணும் பொங்கலை யொட்டி, தென்பெண்ணை ஆற்றில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.காணும் பொங்கலை யொட்டி, விழுப்புரம் நகரில் உள்ள நகராட்சி பூங்கா, கலெக்டர் பெருந்திட்ட வளாக பூங்காவில் நேற்று காலை 10.00 மணி முதல் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.இதேபோல், விழுப்புரம் அருகே எல்லீஸ்சத்திரம், கப்பூர் கிராம பகுதிகளில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் பொதுமக்கள் குடும்பங்களோடு சென்று ஆற்றுநீரில் விளையாடி மகிழ்ந்தனர்.