தொழிலாளி மர்ம சாவு போலீசார் விசாரணை
மயிலம் : மயிலம் அருகே இறந்து கிடந்த பூக்கடை தொழிலாளி உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.திண்டிவனம் தீர்த்த குள வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 43; பூக்கடை தொழிலாளி. இவரது மனைவி பிரவீனா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மனைவியிடம் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கிருஷ்ணமூர்த்தி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.கடந்த மூன்று மாதங்களாக திண்டிவனம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். இவரது வீட்டில் துர்நாற்றம் வீசியதால், அருகில் உள்ளவர்கள் மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் வந்து பார்த்த போது, வீட்டினுள் அழுகிய நிலையில் கிடந்த கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.