உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொங்கல் சிறப்பு வழிபாடு

பொங்கல் சிறப்பு வழிபாடு

விழுப்புரம், : கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் தை திருநாள் சிறப்பு வழிபாடு நடந்தது.கோலியனுாரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பூமிதேவி, ஸ்ரீ நிலாதேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் தை மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 8:00 மணிக்கு தொடங்கி மூலவர் பெருமாளுக்கும், உற்சவர் பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது. மூலவர் வரதராஜ பெருமாள் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தாயார் உடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. பிறகு, உற்சவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, அர்த்தமண்டபத்தில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை