சித்தாத்துார் கோவிலில் பிரதோஷ பூஜை
கண்டாச்சிபுரம் : சித்தாத்துார் வயலீஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோஷ பூஜை நடந்தது.அதனையொட்டி, அறிவுடைநாயகி சமேத பாலேஸ்வரருக்கு நேற்று முன்தினம் காலை அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மாலை 5:30 மணிக்கு பிரதோஷகால சுவாமிகளுக்கு மகா தீபாரதனை நடந்தது. பின், கோவில் உட்பிரகாரத்தில் சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இசைக்குழுவினர் தேவார பாடல்களைப் பாடினர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்களும் செய்திருந்தனர்.