மேலும் செய்திகள்
அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
25-Jun-2025
கண்டாச்சிபுரம்; சித்தாத்துார் வயலீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் பிரதோஷ கால சிறப்பு பூஜை நடந்தது.முன்னதாக அறிவுடைநாயகி சமேத பாலேஸ்வரருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 5:30 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் பிரதோஷ நாயகர் நந்தி பகவானுக்கு அபிஷேகமும், சிறப்பு தீபாரதனையும் நடந்தது. பின் நந்தி பகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.தொடர்ந்து உற்சவர் வயலீஸ்வரர் உட்பிரகாரத்தில் உலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.
25-Jun-2025