ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்
திருவெண்ணெய்நல்லுார்: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் நடந்தது. சங்க தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். செயலாளர் மண்ணாங்கட்டி கடந்த மாத கூட்ட அறிக்கையை வாசித்தார். பொருளாளர் செல்வராஜ் கடந்த மாத வரவு செலவு அறிக்கை வாசித்தார்.கூட்டத்தில் கூட்டுறவு துறை சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் 9,000 ரூபாய் வழங்க வேண்டும். 80 வயது நிறைவடைந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர்களுக்கும் கூடுதல் ஓய்வூதியம் 20 சதவீதம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.