உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்

விக்கிரவாண்டி: சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விக்கிரவாண்டியில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.விக்கிரவாண்டி போக்குவரத்து போலீஸ் சார்பில் டோல்பிளாசாவில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்திற்கு இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமை தாங்கி இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினார்.சப்-இன்ஸ்பெக்டர்கள் துரைராஜ், முத்துராஜ் ஆகியோர் சாலைபாதுகாப்பு கடைபிடிப்பது குறித்தும்,ெஹல்மெட் அவசியம் குறித்தும் பேசினர்.டோல்பிளாசா துணை மேலாளர் சொர்ணமணி, பாதுகாப்பு மேலாளர் அசோக்குமார், பி.ஆர்.ஓ., தண்டபாணி மற்றும் போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி