உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தெற்கு மாவட்ட தி.மு.க., ஆலோசனை கூட்டம்

தெற்கு மாவட்ட தி.மு.க., ஆலோசனை கூட்டம்

விழுப்புரம்: பூத் முகவர்கள் மற்றும் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடக்க உள்ளதாக, விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் கவுதமசிகாமணி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் பூத் முகவர்கள் - 2 மற்றும் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. இந்த கூட்டம் காலை 10:00 மணிக்கு திருக்கோவிலுார் தேவிமுருகன் மண்டபத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பூத் முகவர்கள் 2 மற்றும் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்குகிறார். எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, மாவட்ட அவை தலைவர் ஜெயச்சந்திரன், தலைமை தொகுதி பொறுப்பாளர்கள் கார்த்திகேயன், ஜெயராஜ், தலைமை வழக்கறிஞர் சுவை சுரேஷ், மாநில மகளிரணி பிரசாரக்குழு செயலாளர் தேன்மொழி, மாவட்ட துணை செயலாளர்கள் முருகன், கற்பகம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு, பூத் முகவர்கள், தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பளார்கள் உள்ளிட்டோர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ