உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மாவட்டத்தில் இன்று நடக்கிறது
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடக்கிறது. கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கடந்த ஜூலை 15ம் தேதி துவங்கியது. இதில், 15 துறைகள் சார்பில் பொதுமக்கள் மனுக்களை நேரடியாக வழங்கலாம். முகாமில், மருத்துவ காப்பீடு அட்டை, ஆதார், இ-சேவைகள் வழங்கப்படுகிறது. மகளிர் உரிமை தொகை கோரும் மகளிர் நேரடியாக சென்று விண்ணப்ப படிவம் பெற்று உரிய ஆவணங்களோடு பதியலாம். முகாம், இன்று 2ம் தேதி விழுப்புரம் நகராட்சி, திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி, விக்கிரவாண்டி, கண்டமங்கலம், மேல்மலையனுார், செஞ்சி ஒன்றியங்களில் நடக்கிறது. விழுப்புரம் திருச்சி மெயின் ரோட்டில் உள்ள கே.ஆர்., மண்டபத்தில் வார்டு 11, 25 பகுதிகளை சேர்ந்த மக்கள் மனுக்களை வழங்கலாம். திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி, மங்களாம்பிகை மண்டபத்தில் நடக்கும் முகாமில், 8 முதல் 15 வார்டுகளை சேர்ந்த மக்களும், விக்கிரவாண்டி ஒன்றியம், மட்டப்பாறை பாபு ஜே.கே., மகாலில் நடக்கும் முகாமில், முட்டத்துார், செ.புதுார், திருநந்திபுரம், செ.குன்னத்துார் ஊராட்சி மக்கள் மனுக்களை வழங்கலாம். கண்டமங்கலம் ஒன்றியம், வள்ளி மண்டபத்தில் நடக்கும் முகாமில், ஆழியூர், சின்ன பாபுசமுத்திரம், தாண்டவமூர்த்திகுப்பம் ஊராட்சி மக்களும், மேல்மலையனுார் ஒன்றியம், எதப்பட்டு மகாலட்சுமி மகாலில் நடக்கும் முகாமில், எதப்பட்டு, கரடிகுப்பம், தாழங்குணம் ஊராட்சி மக்களும் மனுக்களை வழங்கலாம். செஞ்சி ஒன்றியம், மழவந்தாங்கல் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடக்கும் முகாமில், பழவலம், மழவந்தாங்கல் ஊராட்சி மக்கள் மனுக்களை வழங்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.