மேலும் செய்திகள்
வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபருக்கு 'குண்டாஸ்'
16-Oct-2024
விழுப்புரம்: திண்டிவனம் அருகே குட்கா வழக்கில் தொடர்புடையவரை போலீசார், தடுப்புக் காவலில் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், கிளியனுார் போலீசார் கடந்த மாதம் 4ம் தேதி, சோதனைச் சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, 2 கார்களில் குட்கா பொருட்களை கடத்தி வந்தவர்களை பிடித்து, பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக, திண்டிவனம் அடுத்த காவடி கிராமத்தைச் சேர்ந்த துரை, 46; என்பவரை கைது செய்தனர்.இவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் வகையில், எஸ்.பி., தீபக்சிவாச் பரிந்துரையின் பேரில், தடுப்புக் காவலில் கைது செய்ய கலெக்டர் பழனி உத்தரவிட்டார். இதனையடுத்து, கிளியனுார் போலீசார் துரையை நேற்று தடுப்புக் காவலில் கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
16-Oct-2024