உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இ-நாம் முறை மாற்றத்திற்கு எதிர்ப்பு கொள்முதல் செய்வதில்லை என வியாபாரிகள் முடிவு

இ-நாம் முறை மாற்றத்திற்கு எதிர்ப்பு கொள்முதல் செய்வதில்லை என வியாபாரிகள் முடிவு

'மார்க்கெட் கமிட்டிகளில் இ-நாம் முறையை மாற்றினால் கொள்முதல் செய்யப்போவதில்லை' என வணிகர்கள் மற்றும் முகவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் குபேரன் தெரிவித்துள்ளார். விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலுார் மாவட்டங்களைச் சேர்ந்த ஒழுங்குமுறை விற்பனை கூட அனைத்து வேளாண் விளைபொருள் வணிகர்கள் மற்றும் முகவர்கள் கூட்டமைப்பு, அரிசி ஆலை மற்றும் நெல், அரிசி வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் குபேரன் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு பின் அவர் கூறியதாவது: ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வியாபாரிகள் கொள்முதல் செய்த விளை பொருட்களுக்குண்டான தொகையை விற்பனை கூட வங்கி கணக்கிற்கு மொத்தமாக அனுப்பி வந்தனர். இதை பிரித்து ஒவ்வொரு விவசாயிகளின் வங்கி கணக்கிற்கும், விற்பனை கூட நிர்வாக அலுவலர்கள் அனுப்பி வந்தனர். இதை மாற்றி வியாபாரிகளே விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு இ-நாம் வலைதள பக்கம் மூலம் பணத்தை அனுப்ப வேண்டும் என தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரிய ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளது. பழைய நடைமுறையே தொடர வேண்டும். கமிட்டியில் பழைய நடைமுறையில் விவசாயிகள் மற்றும் உறவுகள் சரியாக இருந்தது. புதிய நடைமுறையில் பல நிர்வாக சிக்கல்கள் உள்ளன. பணம் பட்டுவாடாவில் நடைமுறையை மாற்றி புதிய நடைமுறை அமல்படுத்தினால் வரும் 30ம் தேதி முதல் காலவரையற்ற முறையில் மறைமுக ஏலத்தில் பங்கேற்பதில்லை, கொள்முதலும் செய்யப்போவதில்லை. இவ்வாறு குபேரன் கூறினார். வியாபாரிகளின் இந்த திடீர் போராட்டம் அறிவிப்பால் விளை பொருட்கள் கொள்முதல் பாதிக்கும் இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை