நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா
செஞ்சி, ; செஞ்சி நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது. செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு இலவச சட்ட பணிகள் குழு சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. சார்பு நீதிபதி இளவரசி, குற்றவியல் நடுவர் மனோகரன் ஆகியோர் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். பார் அசோசியேஷன் தலைவர் பிரவீன், மூத்த வழக்கறிஞர்கள் வெங்கடேசன், ராஜேந்திரன், புண்ணியகோட்டி, இளஞ்செழியன், கலைவாணி, மஞ்சுளா, சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.