உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வடகால் செல்வ விநாயகர் கோவில் நாளை கும்பாபிஷேகம்

வடகால் செல்வ விநாயகர் கோவில் நாளை கும்பாபிஷேகம்

செஞ்சி; செஞ்சி அடுத்த வடகால் செல்வ விநாயகர் கோவிலில் திருப்பணிகள் செய்து, மகா மண்டபம், நவகிரக சிலைகள் பிரதிஷ்டை செய்து மகா கும்பாபிஷேக விழா நாளை 20ம் தேதி நடைபெற உள்ளது. விழாவையொட்டி, இன்று காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு முதல் காலையாக சாலை பூஜை நடக்கிறது. நாளை 20ம் தேதி காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜையும், 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 10.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ