கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் : விழுப்புரத்தில் அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். பொருளாளர் நதியா முன்னிலை வகித்தார். மாநில செயலாளர்கள் ஷாஜகான், சுரேஷ் கோரிக்கை உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில், கிராம உதவியாளர்களுக்கு டி கிரேடு ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளர் வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.