உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாகன சாகசங்களில் ஈடுபடக்கூடாது விழுப்புரம் மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

வாகன சாகசங்களில் ஈடுபடக்கூடாது விழுப்புரம் மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

விழுப்புரம்: தீபாவளி பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் வாகன சாகசங்களில் ஈடுபடக் கூடாது என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விழுப்புரம் மாவட்ட காவல் துறை செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊருக்குச் செல்லும் இளைஞர்கள் வாகனங்களை அதிவேகமாக இயங்கி, சாகசங்களில் ஈடுபட்டு விபத்தில் சிக்கி தங்களுக்கும், தங்களின் குடும்பத்திற்கும் மீளா துயரத்தை ஏற்படுத்த வேண்டாம். வாகனங்கள் ஓட்டும்போது, தலைக்கவசம் அணிந்து சாலை விதிகளை பின்பற்றி மித வேகமாகவும், பாதுகாப்போடு பயணம் செய்ய வேண்டும். தீபாவளி பண்டிகையின் போது, கடந்தாண்டு அக்டோபர் 29ம் தேதி முதல் நவம்பர் 2ம் தேதி வரை 58 சாலை விபத்துகளில் 8 பேர் இறந்துள்ளனர். 74 பேர் காயமடைந்துள்ளனர். இந்தாண்டு, தற்போது வரை 18 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் சாலை விபத்துகளில் 46 பேர் இறந்துள்ளனர். 84 பேர் பலத்த காயமும், 176 பேர் லேசான காயங்களோடு பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு சாலை விபத்தில் 58 இளைஞர்கள் இறந்துள்ளனர். 108 பேர் பலத்த காயமும், 254 பேர் லேசான காயமும் ஏற்பட்டு பாதித்தனர். இளைஞர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்கள் மற்றும் சாலை விதிகளை மீறும் இளைஞர்கள் மீது புதிய தண்டனை சட்டம் (பாரதீய நியாய சன்ஹிதா) படி வழக்குப் பதிந்து அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்து, கோர்டில் ஆஜர்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி