மகளிர் கல்லுாரி கருத்தரங்கு
விழுப்புரம் : விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில், ஆங்கில முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பில், சமகால இலக்கியத்தின் விமர்சன வாசிப்பு தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.ஆங்கில துறை தலைவர் சரண்யா வரவேற்றார். மணப்பந்தல் ஏ.வி.சி. கல்லுாரியின் ஆங்கில பேராசிரியர் பாலு, கல்வி ஆராய்ச்சியில், சமகால இலக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். தொடர்ந்து, மாணவிகளுடன் கலந்துரையாடல் நடந்தது. உதவி பேராசிரியர் அபிராமி நன்றி கூறினார்.