உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போலீஸ் எஸ்.ஐ.,யை திட்டிய வாலிபர் கைது

போலீஸ் எஸ்.ஐ.,யை திட்டிய வாலிபர் கைது

விழுப்புரம்: போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை ஆபாசமாக திட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் விஜய், ஜானகிபுரம் ரயில்வே கேட் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, விழுப்புரம் அபிராமேஸ்வரர் நகரை சேர்ந்த ஆசிப், 29; என்பவர் அங்கு மது அருந்தியதை, சப் இன்ஸ்பெக்டர் விஜய் எச்சரித்தார். இதனால், ஆத்திரமடைந்த ஆசிப், சப் இன்ஸ்பெக்டர் விஜயை ஆபாசமாக திட்டினார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து ஆசிப்பை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ