உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக்கில் மது கடத்திய வாலிபர் கைது

பைக்கில் மது கடத்திய வாலிபர் கைது

மரக்காணம்: புதுச்சேரியில் இருந்து பைக்கில் மதுபானம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மரக்காணம் அடுத்த அசப்பூர் காளியம்மன் கோவில் அருகே சப் இன்ஸ் பெக்டர் கிருஷ்ணன் வாகன சோதனையில் ஈடு பட்டார். அப்போது, புதுச்சேரியில் இருந்து பைக்கில் 40 மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த நாகல்பாக்கத்தை சேர்ந்த அருள்தாஸ், 38; என்பவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, மது பாட்டில்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ