லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி
மயிலம்:மயிலம் அருகே லாரி மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார். மயிலம் அடுத்த தென்பசியார் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் சரத்குமார், 29; தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு கூட்டேரிப்பட்டில் இருந்து தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். தென்பசியார் கிராமம் அருகே வந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சரத்குமாரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இறந்த சரத்குமாருக்கு 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.