உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஏரியில் மூழ்கி இளைஞர் பலி

ஏரியில் மூழ்கி இளைஞர் பலி

செஞ்சி: செஞ்சி அருகே வல்லம் ஏரி மூழ்கி மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் இறந்தார்.செஞ்சி அடுத்த களையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் அஜித், 20; சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. நேற்று காலை அஜித்தை தேடி அவரது தந்தை வல்லம் ஏரி பகுதிக்கு சென்ற போது, ஏரியில் இறந்த நிலையில் அஜித்தின் உடல் மிதந்தது. செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ