உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் 

விருதுநகர்:    ராமநாதபுரம் மண்டல கூட்டுறவு சார்பதிவாளர் வேல்முருகனை சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்ய கோரி விருதுநகரில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  மாவட்ட தலைவர்  மு.விநாயக அரசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அந்தோணி ராஜ், வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம்,  ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஈஸ்வரன்,  அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன்,   ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் வைரவன் பேசினர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !