மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
19 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
19 hour(s) ago
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாயின.சிவகாசியில் மே 9ல் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் பலியாகினர். 14 பேர் காயமடைந்தனர். அந்த சுவடு காயும் முன் நேற்றும் நாரணாபுரத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.சிவகாசி காத்தநாடார் தெருவை சேர்ந்தவர் ராஜாராம் 47. இவருக்கு நாரணாபுரத்தில் நாக்பூர் உரிமம் பெற்ற மகேஸ்வரி பட்டாசு ஆலை உள்ளது. 42 அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யபடுகிறது. நேற்று அதிகாலை 5:55 மணியளவில் பட்டாசு ஆலையில் வெடி மருந்து இருப்பு வைத்திருக்கும் அறையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் வெடி பொருட்கள் இருப்பு வைத்திருந்த மூன்று அறைகள் இடிந்து தரைமட்டமானது. தொழிலாளர்கள் பணிக்கு வருவதற்கு முன் விபத்து நடந்ததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.நேற்று முன்தினம் பட்டாசு உற்பத்தி முடிந்து, மீதமிருந்த மணி மருந்தை இருப்பு வைத்து உள்ளனர். அதில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.இதே பட்டாசு ஆலையில் 2023 மார்ச்சில் இதே போன்று மணி மருந்து இருப்பு வைக்கப்பட்டிருந்த அறையில் இரவு 11:50 மணிக்கு வெடி விபத்து ஏற்பட்டது. ஒரே ஆலையில் மீண்டும் மீண்டும் இதே போன்று விதி மீறலால் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் மூன்று விபத்துக்கள்
இந்த வாரத்திலேயே செங்கமலப்பட்டியில் இரு வெடிவிபத்து, நாரணாபுரத்தில் ஒன்று என அடுத்தடுத்து மூன்று வெடி விபத்து ஏற்பட்டதால் பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். செங்கமலபட்டி ஆலையின் உரிமம் ரத்து
சிவகாசி செங்கமலபட்டியில் மே 9ல் சரவணன் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். 9 பெண்கள் உட்பட 14 பேர் காயமடைந்தனர்.விசாரணையில் ஆலையை விதிமீறி குத்தகைக்கு விட்டது, கூடுதல் பணியாளர்களை மரத்தடியில் வைத்து பட்டாசு உற்பத்தி செய்தது, அனுமதித்ததை விட கூடுதல் வெடி மருந்துகளை கையாண்டது, தேவையான கட்டமைப்பு இல்லாமல் பேன்சி பட்டாசு உற்பத்தி செய்தது உள்ளிட்ட விதிமீறல்களால் விபத்து நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டது தெரிய வந்தது.இந்த பட்டாசு ஆலைஉரிமம் 2026 வரை உள்ள நிலையில் உரிமத்தை தற்காலிக ரத்து செய்து மத்திய பெட்ரோலியம் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
19 hour(s) ago
19 hour(s) ago