மறியல் போராட்டம்
விருதுநகர் : விருதுநகர் அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பழைய ஓய்வூதியம் அமல்படுத்துதல், 2022 டிச. முதல் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்குதல் உள்பட ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மண்டலத் தலைவர் வேலுச்சாமி தலைமையில் மறியல் பேராட்டம் நடந்தது. இதில் மண்டல பொதுச் செயலாளர் போஸ், சி.ஐ.டி.யு., மண்டல பொதுச் செயலாளர் வெள்ளத்துரை உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.