| ADDED : ஆக 13, 2024 12:22 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் 2024--25 கல்வி முதலாமாண்டு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி துவக்க விழா நடந்தது.துணைவேந்தர் நாராயணன் வரவேற்றார். பதிவாளர் வாசுதேவன் பல்கலைக்கழக டீன்கள், டைரக்டர்கள், துணைத் தலைவர்களை அறிமுகப்படுத்தி பேசினார். விழாவில் வேந்தர் ஸ்ரீதரன், இணை வேந்தர் டாக்டர் அறிவழகி, துணைத்தலைவர் சசி ஆனந்த் ஆகியோர் மாணவர்களின் கல்வி வேலை வாய்ப்பு எதிர்காலம் குறித்து பேசினர். விழாவில் முதலாமாண்டு மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர் சேர்க்கை அதிகாரி அகிலா நன்றி கூறினார்.