உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஜல் ஜீவன் இணைப்பு  வழங்க கோரிக்கை 

ஜல் ஜீவன் இணைப்பு  வழங்க கோரிக்கை 

விருதுநகர்: விருதுநகரில் ம.நீ.ம., மாவட்ட செயலாளர் காளிதாஸ், கலெக்டர் ஜெயசீலனுக்கு அனுப்பிய மனு: விருதுநகர் பாவாலி ஊராட்சியில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது. பாவாலி வடக்கு தெருவில் இருந்த பொது குடிநீர் குழாயை ஜல் ஜீவன் பணிக்காக 6 மாதங்கள் முன் அகற்றிவிட்டனர். அங்குள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளில் இணைப்பு வழங்க எந்த பணியும் நடக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி