உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசி பி.எஸ்.ஆர்., ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீண்

சிவகாசி பி.எஸ்.ஆர்., ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீண்

சிவகாசி: சிவகாசி பி.எஸ்.ஆர்., ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். சிவகாசி சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. புதுத்தெரு, அம்மன் கோவில் பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக பி.எஸ்.ஆர்., ரோடு முருகன் கோயில், தேரடி முக்கு வழியாக குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பி.எஸ்.ஆர்., ரோட்டில் குழாய் உடைந்து மூன்று நாளாக குடிநீர் முழுவதும் வீணாகி சாக்கடையில் கலந்து ஓடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி