உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாவட்டத்தில் 16 போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்வு

மாவட்டத்தில் 16 போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்வு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக எஸ்.ஐ., போலீஸ் ஸ்டேஷனாக இருந்தவற்றையும், கூடுதல் தேவை ஏற்பட்ட ஸ்டேஷன்களையும் இணைத்து தற்போது 16 போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்த்தப் பட்டுள்ளது. மாவட்டத்தில் பல ஆண்டுகளாக எஸ்.ஐ., ஸ்டேஷன்களாக இருந்தவற்றை இன்ஸ்பெக்டர் ஸ்டேஷன்களாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. எஸ்.ஐ., ஸ்டேஷன்களில் 20 பேர் மட்டுமே பணியில் இருப்பதால் பாதுகாப்பு, திருவிழா, முக்கியஸ்தவர்கள் வருகை ஆகிய பணிகளுக்கு போலீசார் சென்று விட்டால் ஸ்டேஷன் பணி களுக்கு ஆட்கள் இல்லாத நிலை நீடித்து வந்தது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் 280 போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்த்தப்பட்டு இன்ஸ்பெக்டர் தலைமையில் செயல்படும் விதமாகவும், கூடுதல் பணியிடங்களும் உருவாக்கப்படும் என அரசாணை வெளியிடப் பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் ஆமத்துார், மாரனேரி, எம்.புதுப்பட்டி, மல்லாங்கிணர், பந்தல்குடி, கீழராஜகுலராமன், சாத்துார் தாலுகா, அம்மாபட்டி- - அப்பையநாயக்கன்பட்டி இணைப்பு, ஏழாயிரம்பண்ணை, ஆலங்குளம், மம்சாபுரம் -- வன்னியம்பட்டி , ஸ்ரீவில்லிப்புத்துார் டவுன் -- தாலுகா , நத்தம்பட்டி -- கூமாபட்டி , எம்.ரெட்டியபட்டி - -பரளச்சி, நரிக்குடி - -ஏ.முக்குளம் , வீரசோழன் - -கட்டனுார் போலீஸ் ஸ்டேஷன்கள் இணைத்து இன்ஸ்பெக்டர் ஸ்டேஷன்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிதாக இன்ஸ்பெக்டர் பணியிடங்கள், கூடுதலாக எஸ்.ஐ., ஏட்டு, கான்ஸ்டபிள் ஆகிய பணியிடங்கள் உருவாக்கப்படவுள்ளது. இதனால் திருட்டுக்களை தடுக்க ரோந்து, ஸ்டேஷனில் ஆள்பாற்றாக்குறை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு வழக்குகள் தேங்காமல் விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ