7 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் : தந்தை, மகன் கைது
சேத்துார் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தர்ராஜபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் ஆராய்ச்சி ஊருணி ஓடை அருகே தோப்பு வைத்துள்ள சுந்தர்ராஜபுரம் அந்தோணி 56, மகன் மதன் குமார் 24, ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர். இதில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக தோப்பில் பதுக்கி வைத்திருந்த 7 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து இருவரையும் சேத்துார் போலீசார் கைது செய்தனர்.