அரசு கல்லுாரியில் கலைத் திருவிழா
ஸ்ரீவில்லிபுத்துார்: - ஸ்ரீவில்லிபுத்துார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கலைத் திருவிழா 2025 நடந்தது. முதல்வர் சுப சரவணன் தலைமை வகித்தார். தமிழ் துறைத்தலைவர் ரவி முன்னிலை வகித்தார். பேராசிரியர் வளர்மதி வரவேற்றார். விழாவில் எம்.பி. ராணி, எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன், நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன், நாடகவியலாளர் சிவ பஞ்சவன் பங்கேற்று 32 போட்டிகளில் வெற்றி பெற்ற 600க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசினர். பேராசிரியர் கணேஷ்வரி நன்றி கூறினார்.