உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  வெடிகுண்டுகள் பறிமுதல்

 வெடிகுண்டுகள் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவிலில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் ரோட்டில் முனியாண்டி கோவில் பின்புறம் மலை அடிவாரத்தில் விஜயராகவன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இங்கு நேற்று காலை 6:30 மணிக்கு வனகாப்பாளர் ஆனந்தி குழுவினர் ரோந்து செல்லும் போது 7 இடங்களில், வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் நாட்டு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து போலீசாருக்கு தெரிவித்தனர். கிருஷ்ணன்கோவில் போலீசார், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் 7 நாட்டு வெடிகுண்டுகளையும் கைப்பற்றி அழகாபுரி அருகே தனியார் வெடி மருந்து கிடங்கில் பாதுகாப்பாக வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி