தேக்கு மரம் வெட்டியவர் மீது வழக்கு
வத்திராயிருப்பு : கூமாபட்டியைச் சேர்ந்தவர் முகமது. இவர் பட்டா நிலத்திலிருந்து 6 தேக்கு மரங்களை வனத்துறையின் உரிய அனுமதி பெறாமல் வெட்டி எடுத்து கொண்டு சென்றுள்ளார். தகவல் அறிந்த வத்திராயிருப்பு வனச்சரகர் ரவீந்திரன் தேக்கு மரங்களை பறிமுதல் செய்து வனத்துறை சட்டப்படி வழக்கு பதிவு செய்தார். இதில் முகமதுவிற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.