வத்திராயிருப்பில் கலெக்டர் ஆய்வு
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய குன்னூர் ஊராட்சியில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் ரூ.8.90 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நாற்றங்கால் பண்ணையில் நர்சரி மரக்கன்றுகள் வளர்ப்பதை கலெக்டர் சுகபுத்ரா ஆய்வு செய்தார். ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இதுவரை இணையவழி பட்டா கிடைக்காத 9 குடும்பங்களுக்கு பட்டாக்களை நேரில் வழங்கினார். கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு முதல் தவணைத் தொகை ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினார். ஆய்வின் போது தாசில்தார் ஆண்டாள் மற்றும் பிற அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.