அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுப்பு
சிவகாசி:விருதுநகர் மாவட்டம்விஜயகரிசல் குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல், சங்கின் மேற்பகுதி, பச்சை நிற கண்ணாடி மணி கண்டெடுக்கப்பட்டது.இங்கு நடக்கும் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 18 குழிகளில் உடைந்த நிலையில் சுடு மண் உருவ பொம்மை, தங்க மணி, சூது பவள மணி உள்ளிட்ட 3360 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல், சங்கின் மேற்பகுதி, பச்சை நிற கண்ணாடி மணி கண்டெடுக்கப்பட்டது.அகழாய்வு இயக்குனர்பாஸ்கர் பொன்னுச்சாமிகூறுகையில், அதிக அளவில் சங்கு வளையல்கள், அணிகலன்கள், கண்ணாடி மணிகள் அதிக அளவில் கிடைத்து வருகின்றன. முன்னோர்கள் அலங்காரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர், என்றார்.