உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்டியரிங் பழுதாகி டயர் வெடித்து சென்டர்மீடியனில் அரசு பஸ் மோதல் டிரைவர், இரு பயணிகள் காயம்

ஸ்டியரிங் பழுதாகி டயர் வெடித்து சென்டர்மீடியனில் அரசு பஸ் மோதல் டிரைவர், இரு பயணிகள் காயம்

விருதுநகர்: மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பஸ்சின் ஸ்டியரிங் பழுதாகி பின் டயர் வெடித்து நான்குவழிச்சாலை சென்டர்மீடியனில் அறிவிப்பு பலகையில் மோதியது. இந்த விபத்தில் டிரைவர், இரு பயணிகள் காயமடைந்தனர். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர். மதுரையைச் சேர்ந்தவர்கள் அரசு பஸ் டிரைவர் ஜெயக்குமார் 51, கண்டக்டர் நம்பிராஜன். இவர்கள் அரசு பஸ்சில் மாட்டுத்தாவணியில் இருந்து 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் நோக்கி சென்றனர். விருதுநகர் நான்குவழிச்சாலையில் புல்லலக்கோட்டை சந்திப்பு அருகே நேற்று மதியம் 12:45 மணிக்கு பஸ் சென்ற போது ஸ்டியரிங் பழுதாகி நின்றதால் கட்டுப்பாட்டை இழந்து பின் டயர் வெடித்து சென்டர் மீடியனில் அறிவிப்பு பலகையில் மோதி நின்றது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி சேதமாகி டிரைவர், இரு பயணிகள் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர். மாற்று அரசு பஸ் வரவழைக்கப்பட்டு பயணிகள் நாகர்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி